Tuesday, March 24, 2015

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது


62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின்   
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள், இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும்  பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத்  தேர்வு செய்யப்பட்டுள்ளது

62 வது  திரைப்பட தேசியவிருதுகள் :


சிறந்த திரைப்படம்:"கோர்ட்" (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்)

சிறந்த நடிகர்: விஜய், "நானு அவனல்ல அவலு " (கன்னடம்)

சிறந்த நடிகை: கங்கான ரனாவத், "குயின்" (இந்தி)

சிறந்த பிரபல திரைப்படத்துக்கான பொழுதுபோக்கு படம்  "மேரி கோம்" (இந்தி); தயாரிப்பாளர்:  18 மோஷன் பிக்சர்ஸ்; இயக்குனர்: ஓமங் குமார்

சிறந்த சுற்றுசூழல்  பாதுகாப்பு  படம்: "ஒட்டால் (மலையாளம்)

சிறந்த இயக்கம்: ஸ்ரீசித் முகர்ஜி, " சொட்டுஸ் கோன்(Chotushkone) (பெங்காலி)

சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா"ஜிகர்தண்டா" (தமிழ்)

சிறந்த துணை நடிகை: பிலிஜிந்தர் கவுர், "பக்டி தி ஹானர்" (அரியானா)

சிறந்த பின்னணிப் பாடகருக்கான: சுக்விந்தர்சிங், "ஹைதர்" (இந்தி) (பாடல்: "பிஸ்மில்")

சிறந்த பின்னணி பாடகி: உத்தரா உன்னி கிருஷணன் , "சைவம்" (தமிழ்) (பாடல்: "அழகு")

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: தோலி அகுலுவாலியா, "ஹைதர்" (இந்தி)

சிறந்த இசை அமைப்பாளருக்கான அ) பாடல்கள்: விஷால் பரத்வாஜ், "ஹைதர்" (இந்தி) ஆ) பின்னணி: கோபி சுந்தர், "1983" (மலையாளம்)

சிறந்த இந்தி திரைப்படம்: "குயின்", தயாரிப்பாளர்: பாண்டம் ஃபிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் கோப்பு வரலாறு 18 மோஷன் பிக்சர்ஸ் இயக்குனர்: விகாஸ் பாஹ்ல்

 சிறந்த நடன அமைப்பு: "ஹைதர்" (இந்தி)

சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: "ஓதெல்லோ"

பெங்காலி படம் சிறந்த "நிர்பஷிட்டோ"

சிறந்த மலையாளத் திரைப்படம்: "ஐன்"

சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: "கிலா"

சிறந்த ஒடியாதிரைப்படம்: "ஆதிம் விசார்"

சிறந்த பஞ்சாபி திரைப்படம் பஞ்சாப்: "1984"

தமிழ் திரைப்பட சிறந்த: "குற்ரம் கடிதல்

தெலுங்கு படத்தில் சிறந்த: "சந்தமாமா கதலு"

சிறந்த ரபா  திரைப்படம்: "ஓரங்"

சிறந்த ஹரியன்வி, திரைப்படம்: "பகடி தை ஹானர்"

சிறப்பு குறிப்பு: "ஐன் '(மலையாளம்)," நிகோம் Nachom - ஐ ஏ கும்பசார் "&" பூத்நத் ரிட்டர்ன்ஸ் "(கொங்கனி)" கிலா "(மராத்தி) (இந்தி) பூத் நாத் ரிட்டன்ஸ்( இந்தி)

சினிமா சிறந்த எழுத்துல்: தமிழ் சினிமா ப்ரைட் (சிறப்பு குறிப்பு) ஜி தனஞ்செயன் 

சினிமா சைலண்ட் சினிமா  எழுத்து: (1895-1930) பசுபுலிட்டி  பூரணசந்திரராவ் 


சிறந்த திரைப்பட விமர்சகர் -தனுல் தாகூர்



Monday, March 2, 2015

ஷாலினி அஜீத்துக்கு பிரசவம் ஆனது: ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் அஜித்

அஜீத்தின் மனைவி ஷாலினி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 அஜீத், ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அன்பின் அடையாளமாக அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். 

என்னை அறிந்தால் படத்தை முடித்த கையோடு அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கர்ப்பிணியான ஷாலினியுடன் இருக்க அவர் 2 மாதம் பிரேக் எடுத்துள்ளார். 

இந்நிலையில் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

அஜீத்தின் அடுத்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். படத்தில் சந்தானமும் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 

அஜீத், ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Saturday, February 28, 2015

சிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய முயற்சி - அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சூதாட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது.
 
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, கொலை குற்றச்சாட்டின் பேரில் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் ஸ்ரீசாந்தை கொல்ல முயன்றதாக அவரது மைத்துனரும் பிரபல மலையாள பின்னணி பாடகருமான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகர் பாலகிருஷ்ணன், “ஸ்ரீசாந்துக்கும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என எங்கள் குடும்பம் முழுமையாக நம்புகிறது. ஏதோ காரணத்தால் பின்னப்பட்ட சதி வலையில் அவர் தள்ளப்பட்டார். இவ்விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
 
திகார் சிறையில் அவர் இருந்தபோது, கொலை வழக்கு கைதியாக அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் கதவின் தாழ்ப்பாளை கூர் தீட்டி, கத்தி போல் தயாரித்தான். அதை கொண்டு ஸ்ரீசாந்தை அவன் குத்திக்கொல்ல முயன்றான்.
 
ஸ்ரீசாந்த் அந்த மன அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. இந்த சம்பவம் சிறைக்குள் நடந்தது என்பதால் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.


சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் ?

அஜீத்தின் மனைவி ஷாலினி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளும் அஜீத், ஷாலினியின் பிரசவத்துக்குப் பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு.

இந்தப் படத்துக்கு அச்சமில்லை என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜீத்தின் முந்தையப் படத்துக்கு பெயர் வைப்பதில் கடும் இழுபறி நடந்து, படம் வெளியாகும் நேரத்தில்தான், என்னை அறிந்தால் பெயரை இறுதி செய்தனர்.

அப்படி இல்லாமல் முன்பே படத்தின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார் சிவா. அச்சமில்லை பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அந்தப் பெயரே இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

Friday, February 20, 2015

லிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன ?

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க விடாமல் ரஜினியை இரு முன்னணி நடிகர்கள் தடுப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் சிலர் பிரஸ் மீட் வைத்து நிருபர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கூறினர் அல்லவா.. 

அந்த நடிகர்கள் யார் யார் என்று மீடியாக்காரர்கள் திரும்ப கேட்டதற்கு அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினர் விநியோகஸ்தர்கள். 

ஆனால் ஆப் த ரெக்கார்டாக, அந்த நடிகர்கள் விஜய் மற்றும் சரத் குமார்தான் என்று கூறியதாக தகவல் பரவியது. 

சில மீடியாக்களில் செய்திகளும் வெளியானது. இந்த தகவல் கேள்விப்பட்டதும் விஜய்யின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 யார் வம்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய்யை இந்த விநியோகஸ்தர்கள் எதற்காக வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர். 

'லிங்கா விவகாரத்தில் விஜய்க்கு துளியும் சம்பந்தமில்லை. இந்த நிலையில் அவர் ரஜினியிடம் போய், லிங்காவுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறியிருப்பது விஷமத்தனமானது. 

போகிற போக்கில் அத்தனை பேர் பெயரையும் இழுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இவர்கள். இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


Wednesday, February 18, 2015

ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த ராம்ஜெத்மலானி ( வீடியோ)

மும்பையில் நடந்த விருது விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹம் லோக் விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

 நடிகையான லீனா திருமணமான சில நாட்களிலேயே கணவரை இழந்தார். அதன் பிறகு அவர் ஏற்கனவே 3 முறை திருமணமான பாடகர் கிஷோர் குமாரை திருமணம் செய்து சுமித் கங்குலி என்ற ஆண் குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ராம்ஜெத்மலானி கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்டர்நெட்டில் தீயாக பரவியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராம் ஜெத்மலானி.